ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன் மனைவியின் சகோதரரான அனிருத்தை 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அனிருத்துக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கொடுத்து அவரை வளர்த்துவிட்டது தனுஷ்தான். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அனிருத் நான் வளர்த்த பிள்ளை என்று சொன்னார் தனுஷ். அந்தளவுக்கு அனிருத்துக்கு திரையுலகில் விசிட்டிங் கார்டாக இருந்தார்.
அப்படி சொன்ன தனுஷ் இப்போது கொடி படத்திலிருந்து அனிருத்தை நீக்கிவிட்டு சந்தோஷ்நாராயணனை இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறார். சமீபகாலமாக தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களுக்கும் அனிருத் தான் இசை அமைப்பாளர். கொடி படத்துக்கும் அவர்தான் இசை அமைப்பாளராக கமிட்டாகி இருந்தார். பீப் பாடல் விவகாரத்தில் அனிருத் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே போலீஸுக்கு பயந்து கனடா, லண்டன் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் அனிருத். இதனால் அவர் முடிக்க வேண்டிய இசைப்பணிகள் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இதை எல்லாம் முடித்துவிட்டு வந்தாலும் பீப் பாடல் விவகாரத்தில் கெட்டு குட்டிச்சுவராகிப்போய்விட்டது அவரது இமேஜ்.
இந்த சூழலில் அனிருத்தை கொடி படத்துக்கு இசையமைக்க வைத்தால் தன்னுடைய பெயரும் கெட்டுப்போய்விடும் என்று நினைக்கிறாராம் தனுஷ். அதனாலேயே கொடி படத்திலிருந்து அனிருத்தை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை கமிட் பண்ணி இருக்கிறார். இதுதான் சமயம் என்று பெரிய சம்பளம் கேட்டு பிகு பண்ணி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கடைசியில் முக்கால்கோடிக்கு சம்மதித்தாராம்.