ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய்சேதுபதி நடித்துள்ள முதல் போலீஸ் படம் 'சேதுபதி'. மதுரையில் வாழும் கண்டிப்பான போலீஸ் அதிகாரி. அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இருவரும் இரண்டு குழந்தையின் தாய் தந்தையாக நடித்துள்ளனர். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி விஜய் சேதுபதிக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லனாக நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"இது வழக்கமான போலீஸ் கதை இல்லை. பன்ஞ் டயலாக் இல்லை, துரத்தல் இல்லை, என்கவுண்டர் இல்லை. குடும்பத்தை நேசிக்கும் ஒரு மனிதன் போலீஸ் அதிகாரியாக இருந்தால் அந்த குடும்பம் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. வீட்டுக்குள் அன்பான கணவன், தந்தை.
யூனிபார்மை மாட்டிவிட்டால் நேர்மையான டெரர் போலீஸ் அதிகாரி. இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்வு பரிமாற்றங்கள்தான் கதை. ரம்யா நம்பீசனிடம் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற சொன்ன உடனேயே விஜய்சேதுபதி நடிக்கிறார் என்றால் அந்த கதை அழுத்தமாக இருக்கும். நம்பி நடிக்கலாம் என்று சொல்லி நடித்தார். இது இதுவரை பார்த்த் போலீஸ் படங்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விட்டோம். தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது" என்கிறார் இயக்குனர் அருண்குமார்.