ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வசந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலகல கலாட்டா, பன் ஆப் பன், ரெகுலர் ஷோ, நடிகர்கள் பேட்டி போன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெற்று வருபவர் சரவணன். நான் பங்குபெறும் நிகழ்ச்சிகள் மூலம் நேயர்களை சிரிக்க வைப்பதே எனது நோக்கம் என்கிறார் இவர்.
தினமலர் இணைய தளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. இஞ்சினியரிங்கில் அரியர்ஸ் வைத்து விட்டேன். அதனால் உனக்குத்தான் வாய் இருக்கே அதை வைத்து பொழச்சிக்கோ என்று பலரும் சொன்னார்கள். அதனால் ரேடியோ ஜாக்கியாக முடிவு செய்தேன். ஆனால் எப்எம்மில் யார் மூலமாக சேருவது என்பது தெரியவில்லை. அதையடுத்து ஏதாவது சேனல்களில் சேரலாம் என்றாலும் அங்கேயும் தெரிந்த நபர்கள் இல்லை. அதனால் 6 மாதமாக ஒவ்வொரு சேனல் வாசலுக்கும் சென்று செக்யூரிட்டிகளால் துரத்தப்பட்டு வந்தேன்.
அப்போது விஜய் டிவியில் 'அது இது எது' நிகழ்ச்சியில் இருந்து சிவகார்த்திகேயன் விலகி விட்டதால் அந்த இடம் காலியாக உள்ளது என்று ஒருவர் சொன்னார். அதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பார்ட்டி கொடுக்க 10 ஆயிரம் கொடு என்றனர். நானும் கொண்டு வந்து கொடுத்தேன். என்னிடம் பணம் இல்லாததால் கடன் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் என்னை அது இது எதுவில் சேர்த்து விடுவதாக சொன்னவர்கள் வரசொன்ன நாளில் தங்களது போனை சுவிட் ஆப் செய்து என்னை ஏமாற்றி விட்டனர்.
அதன்பிறகு கேப்டன் டிவிக்கு ஆடிசன் போனேன். என் அக்கா பாரதிதான் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார். அதன்பிறகு விஜய் டிவியில் சீரியல் பண்ணும் மனோஜ் என்பவர் மூலம் வசந்த டிவி புரோகிராம் டைரக்டர் ஹாரிஸ் என்பவரை சந்தித்து 2011ல் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேனலுக்குள் வந்தேன்.
* நிகழ்ச்சி தொகுப்பாளராக உங்களது நோக்கம் என்ன?
நான் இடம்பெறும் நிகழ்ச்சிகளை கலகலப்பாக நடத்த வேண்டும். முக்கியமாக நேயர்களை சிரிக்க வைத்து சந்தோசப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. மேலும், எனது நிகழ்ச்சிகளுக்கு ரெஸ்பான்ஸ் உள்ளது. மேலும், ஈவன்டில் பேசும்போது நேயர்களின் ரெஸ்பான்ஸ் நமக்கு தெரியாது. நான் பேசும்போது கவனத்தை என் பக்கமே வச்சிருப்பேன். அதோடு, ரஜினி சார் சொன்னது போன்று கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற பாணியில் எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
* நீங்கள் ஜாலியான டைப்பா? இல்லை சீரியஸ் டைப்பா?
ஒன்றரை மணி நேரம் என்கூட இருந்தால் பத்து தடவை சிரிப்பீங்க. 15 தடவை கலாய்ப்பதாக அடிக்க வருவீங்க. இதுதான் எனது கேரக்டர். ஆக, நான் ஒரு கலாய்ப்பு மன்னன். சின்னத்திரையை கடந்து சினிமாவிலும் எனது பங்களிப்பு தொடர்கிறது. அதிதி படத்தில் ப்ரண்ட் ரோல், மலையாள காக்டெய்ல், விமல் நடித்த காவல் உள்பட பல படங்களில் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருக்கிறேன். சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஆடிசனுக்கும் சென்று வந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை சிரித்து மட்டும்தான் எண்டர்டெய்ன் மென்ட் பண்ண முடியும் என்பதல்ல. வில்லத்தனம், அழுது நடிப்பதிலும் பண்ண முடியும். அந்த வகையில் சத்யராஜ் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
* எதிர்கால திட்டம்?
ஒருவர்கூட சாப்பாடு இல்லாமல் சாகக்கூடாது என்று நினைப்பவன் நான். அதனால் எதிர்காலத்தில் ஒரு டிரஸ்ட் தொடங்கி ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால திட்டம். நான் கல்லூரியில் படித்து வந்தபோது 90 வயது பாட்டி ஒருவர் பேப்பர் பொறுக்குவதைப் பார்த்தேன். அவரிடம் அவரது நிலையை விசாரித்தேன். அப்போது மகன் இறந்து விட்டான். மருமகளை அவளது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் நான் பேப்பர் பொறுக்கி சாப்பிட்டு வருகிறேன் என்றார். அது என் மனதை ரொம்பவே பாதித்தது. அதனால் சாப்பாட்டுக்காக பிச்சையெடுக்கும் முதியவர்களைக் கண்டால் என் கண்கள் கலங்கி விடும் என்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் சரவணன்.