ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசை படம் கொடுத்த தோல்வி காரணமாக தற்காலிகமாக படமே இயக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதனால் வை ராஜா வை என்ற படத்தில் ஒரு ஆட்டோக்காரன் பாடலில் தோன்றி நடனமாடியவர், யட்சன், 144 படங்களில் நடித்தார். இப்போது இறைவி உள்பட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, மீண்டும் முக்கிய கதாநாயகனாக நடிக்கவும் சிலரிடம் கதை கேட்டு வந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இந்நிலையில், சிம்புவை வைத்து கான் படத்தை இயக்கி பின்னர் அதை கிடப்பில் போட்ட செல்வராகவன், அடுத்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கான் படத்தை கிடப்பில் போட்ட பிறகு தனது மனைவி கீதாஞ்சலி இயக்கி வந்த மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு கதை வசனம் எழுதியதோடு, மனைவிக்காக இயக்கத்திலும் உதவி வந்தார் செல்வராகவன். அதோடு, தம்பி தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் சொன்னார்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி தனுஷின் கைவசம் பல படங்கள் இருப்பதால் அவரால் செல்வராகவனுக்கு கால்சீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். அதனால், அவருக்காக காத்திருந்து நீண்டஇடைவெளி கொடுக்க வேண்டாம் என்பதற்காக எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் செல்வராகவன். விரைவில் அந்த படம் குறித்து செய்திகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.