மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பீப் பாடல் தொடர்பாக, முன் ஜாமின் கோரி சிம்பு தாக்கல் செய்த வழக்கு, ஜன.4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேசமயம் போலீசார் அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிம்பு எந்நேரமும் கைதாகலாம் என தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையதளங்களில் பீப் பாடல் என்ற பாடல் ஒன்று வெளியானது. மிகவும் ஆபாசமாக கொச்சையான வார்த்தைகளால் உருவாகியுள்ள இப்பாடலை சிம்பு எழுதி, பாடியிருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக சிம்பு மற்றும் அனிரூத் மீது ஏகப்பட்ட வழக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதோடு கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸிலிருந்து சிம்பு மற்றும் அனிருத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீப் பாடல் தொடர்பான வழக்கில், முன் ஜாமின் கோரி, நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நான் அப்பாவி; எந்த குற்றமும் இழைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நான் பல இசை ஆல்பங்களை பாடி வைத்திருக்கிறேன். அவற்றை படங்களில் பயன்படுத்திவில்லை. சர்ச்சைக்குரிய, பீப் பாடலை நான் வெளி யிடவில்லை. அந்த பாடலை நான் வெளியிட்டதாக, எந்த புகாரிலும் குறிப்பிடப்படவில்லை. மூன்றாவது நபர், உள்நோக்கத்துடன் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ராஜேந்திரன் விசாரித்தார். அப்போது, சிம்புவுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அரசுத் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மகளிர் அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்றனர்.
ஜன.4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு: வழக்கை விசாரித்த நீதிபதி, ஜன 4ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார். அதோடு, முன்ஜாமின் மனு தொடர்பான விசாரணையில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறபிக்க முடியாது என்று நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கோவை போலீஸில் ஜன.2ம் தேதி ஆஜராக சொல்லி சிம்புவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கான கால அவகாசத்தையும் ஜன 5ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கைதுக்கு தடையில்லை : அதே நேரம், போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை, தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.
சிம்பு கைதாகலாம் : கைதுக்கு தடையில்லை என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் சிம்பு எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
யூ-டியூப்பிற்கு பரிந்துரை : பீப் பாடலை உடனே யூ-டியூப்பிலிருந்து நீக்கும்படி யூ-டியூப்பிற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். சென்னை, ஐகோர்ட்டின் உத்தரவு படி யூ-டியூப்பிற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.