மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் அமீர். அதையடுத்து யோகி படத்தில் நாயகனாக நடித்த அவர், ஆதிபகவன் உள்ளிட்ட சில தோல்வி படங்களையும் கொடுத்தார். அதனால் ஏறுமுகத்தில் சென்ற அவர் வேகமாக இறங்குமுகத்தை கண்டார். இந்த நிலையில், தற்போது பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால் கடந்த 2013 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போதுவரை முடியவில்லை. பைனான்ஸ் பிரச்சினையால் தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது கெளதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வரும் சிம்புவைக் கொண்டு அடுத்து தான் ஒரு படத்தை இயக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டார் அமீர். ஆனால் இப்போது அடுத்த ஆண்டு தான் மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கப்போவதாக ஒரு செய்தியை கோலிவுட்டில் வெளியிட்டிருக்கிறார். அப்படி அவர் இயக்கும் படங்களில் சிம்பு, ஆர்யா, ராணா ஆகியோர் தலா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்களாம். இதில் சிம்பு நடிக்கும் படம் ஜனவரியிலும், அதற்கடுத்து ராணா நடிக்கும் படமும், மூன்றாவதாக ஆர்யா நடிக்கும் படத்தையும் தொடங்குகிறாராம் அமீர்.