ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்ததைப் பற்றி கூட மறக்கும் அளவிற்கு இந்த 'பீப் சாங்' பற்றிய சர்ச்சைகளும், பரபரப்பும் அதிகமாகவே எழுந்து கொண்டிருக்கிறது. மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு அசிங்கமான, ஆபாசப் பாடல் வெளியானதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேற்று இரவு அனிருத் தரப்பிலிருந்து அந்தப் பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தேவையில்லாத ஒரு சர்ச்சையில் என்னுடைய பெயரை இழுத்துவிட்டார்கள் என விளக்கமளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிம்பு சார்பாக டி.ராஜேந்தர் தரப்பிலிருந்து சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இன்றைய தேதியிட்ட புகார் மனு பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது. அதில் 'பீப் சாங்' பாடலுக்கு இசையமைத்தது அனிருத் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இசையமைப்பாளராலோ, அல்லது என்னுடைய மகன் சிம்புவாலோ அப்படிப்பட்ட வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அதைத் திருடிய, இசையுடனோ, திரையுலகத்துடனோ சம்பந்தப்பட்ட யாரோ ஒரு நபர்தான் அப்படி ஒரு வார்த்தையை அதில் இடைச் செருகலாகப் பயன்படுத்தி எனது மகனின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சித்திருக்கிறார்,” என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சிம்பு ஊரில் இல்லாததால் அவர் சார்பாக நான் இந்த மனுவைத் தருகிறேன் என்றும் டி.ராஜேந்தர் அதற்கும் ஒரு விளக்கமளித்துள்ளார்.
அனிருத் தரப்பில் அந்த பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன நிலையில் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அந்தப் பாடலை இசையமைத்தது அனிருத்தான் என்று சிம்பு தரப்பில் சொல்லப்படுகிறது.
மாற்றி மாற்றி குழப்பும் இவர்கள் இருவர் மீதும் காவல் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெண்கள், மாதர் சங்கங்கள், ரசிகர்கள் ஆகியோரின் எண்ணமாக உள்ளது.