ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பீப் சாங்' பற்றி அனிருத் கடந்த இரண்டு நாட்களாக காத்து வந்த அமைதியை சற்று முன்னர் விலக்கி விட்டார். அந்தப் பாடல் குறித்த சர்ச்சைகளுக்கு அவருடைய விளக்கத்தை அளித்துள்ளார்.
“தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக டொரன்டோ இசை நிகழ்ச்சிக்காக நான் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். 'பீப் சாங்' பற்றி என்னுடைய நிலையைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தப் பாடல் என்னுடைய இசையிலோ, என்னுடைய எழுத்திலோ நான் பாடியோ உருவாகவில்லை. எனக்கு ஆச்சரியமூட்டும் வகையில் இந்த சர்ச்சையில் எதிர்பாராத விதமாக, எந்த விதத்திலும் சம்பந்தப்படாத என்னையும் இழுத்திருக்கிறார்கள்.
எனக்குப் பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அது என்னுடைய சொந்த இசையமைப்பில் உருவான பாடல்களில் தெளிவாகத் தெரியும். இது சம்பந்தமான எல்லா விதமான தேவையற்ற பேச்சுக்களுக்கும், ஆழ்ந்த வருத்தத்துடன் இந்த விரும்பத்தகாத நிலைமையில் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன், என அனிருத் விளக்கமளித்துள்ளார்.
'பீப் சாங்' பாடலை நானும் அனிருத்தும் இணைந்து தான் உருவாக்கினோம், இப்படி எங்களிடம் 150 பாடல்கள் உள்ளன என சிம்பு நேற்று தெரிவித்திருந்தார்.இப்போது அனிருத்தோ எனக்கும் அந்தப் பாடலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மொத்த சர்ச்சையையும் சிம்பு தலையில் தூக்கி வைத்துள்ளார்.