ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைத்த டைரக்டர் ஹரி, சிங்கம்-2 படத்தில் சூர்யா-அனுஷ்கா ஜோடியோடு இன்னொரு கல்லூரி பெண் வேடத்தில் ஹன்சிகாவையும் நடிக்க வைத்தார். அதேப்போல் சிங்கம்-3 படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடியை இணைத்திருப்பவர், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கிறார்.
கதைப்படி, இந்த மூன்றாம் பாகத்தில் சூர்யா-அனுஷ்காவுக்கு திருமணமாகி அவர்கள் கணவன்-மனைவியாக வாழ்வது போன்று கதை பண்ணியிருக்கும் நிலையில், படம் முழுக்க சூர்யாவுடன் டிராவல் பண்ணும் ஒரு சிஐடி வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம். வில்லனை துரத்திக்கொண்டு சூர்யா வெளிநாடுகளில் நடத்தும் சேசிங் காட்சிகளை கொல்கட்டாவில் படமாக்குகிறார் ஹரி. அப்போது சூர்யாவுக்கு உதவி செய்யும் சிஐடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம்.
மேலும், சிங்கம்-3 படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கட்டாவில் நடத்த திட்டமிட்ட ஹரி, இப்போது சென்னையைப்போன்று அங்கேயும் மழை பெய்து வருவதால் தாமதம் செய்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் சாலைகளில் படமாக்கும் காட்சிகளே அங்கு படமாவதால் மழை நின்ற பிறகுதான் சிங்கம்-3 யூனிட் கொல்கட்டா செல்கிறதாம். அப்படி சூர்யா, டைரக்டர் ஹரி உள்ளிட்ட டீம் கொல்கட்டா செல்லும்போது அவர்களுடன் ஸ்ருதிஹாசனும் செல்கிறாராம். அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில நடைபெறும்போதுதான் இடம்பெறுகிறதாம்.