சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ தென்னிந்திய நடிகர் சங்கமும் களமிறங்கியுள்ளது. நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் எப்படி தேர்தல் களத்தில் இறங்கி செயல்பட்டாரோ அதேப்போன்று இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களத்தில் இறக்கியுள்ளார். இதுகுறித்து விஷால் தெரிவித்திருப்பதாவது... தமிழகத்தில் பெய்த மழையால் கடலூர், வடசென்னை, தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகிறது. நாங்கள் அதிகப்படியாக வட சென்னை பகுதியில் உதவி செய்து வருகிறோம்.
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். சாப்பாடு எல்லா பகுதிமக்களுக்கும் கிடைக்கிறது. எனவே உதவ நினைப்பவர்கள் குடிநீர், பால்பவுடர், போர்வைகள், நாப்கின் போன்ற பொருட்கள் தான் தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நாங்கள் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். இதற்காக சென்னை, சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் முகாம் அமைத்துள்ளோம். இது எங்களது கண்ட்ரோல் ரூமாக செயல்படுகிறது. இங்கிருந்து தான் எல்லா பொருட்களையும் பிரித்து உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.