ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எப்போதும் ஏதாவது ஒரு கருத்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்புவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. இப்போது சென்னையை மழையை பற்றியும், அதற்கு நிதியுதவி அளித்த நடிகர்கள் பற்றியும் நக்கலாக பேசி அவர்களை வம்புக்கு இழுத்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை அந்த மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் முதல் சிவார்த்திகேயன் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்த நடிகர்களை கிண்டல் செய்துள்ளார் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா. இதுகுறித்து தன் டுவிட்டரில் ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது....
சூப்பர் ஸ்டார்கள் கொடுத்த ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் நிதியை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பி போய் உள்ளனர். இதற்கு அவர் நன்கொடை தராமலே இருந்திருக்கலாம் என்றவர் நடிகர் ரஜினிகாந்த்தையும் வம்புக்கு இழுத்துள்ளார். ரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை என்று எண்ணும்போது நான் வியக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளித்தது கிடையாது. குவிண்டால் கணக்கில் பிரார்த்தனை மற்றும் டன் கணக்கில் அன்பை அளிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி என்று கூறியுள்ளார்.