ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிங்கம், சிங்கம்-2 படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சிங்கம்-3. சிங்கம் படத்தில் தூத்துக்குடியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சூர்யா, பின்னர் வில்லன் பிரகாஷ்ராஜின் செயல்பாட்டினால் சென்னைக்கு மாற்றலாகி வருவார். அதையடுத்து அவர்களுக்கிடையே நடக்கும் மோதல்தான் அந்த படம். அதையடுத்து சிங்கம்-2 படத்தில் தூத்துக்குடி என்சிசி ஆசிரியராக நடித்த சூர்யா, பின்னர் மீண்டும் போலீஸ் உயரதிகாரியாகி அங்கு வெளிநாட்டு கனெக்சனுடன் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளை பிடிப்பார். ஆனால் வெளிநாட்டைச்சேர்ந்த வில்லன் டேனி அதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி விடுவார்.
இந்த நிலையில், தற்போது உருவாகும் சிங்கம்-3 படத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற டேனி மற்றும் அவனுக்கு இருக்கும் நெட் ஒர்க்கை எப்படி கண்டு பிடித்து அழிக்கிறார் என்பதுதான் கதையின் முக்கிய லைனாம். அதனால் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அயல்நாடுகளில்தான் நடக்கிறது. இருப்பினும், தனது செண்டிமென்ட் ஏரியாக்களான தூத்துக்குடி, காரைக்குடியில் சில நாட்கள் படமாக்கிவிட்டு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார் டைரக்டர் ஹரி. ஆனால், தமிழகமெங்கும் மழை பெய்து கொண்டிருப்பதால் ஒரு மாதமாக படப்பிடிப்பை தள்ளி வைத்து வந்தார்.
ஆனால், ஏற்கனவே சூர்யாவுக்காக பல மாதங்களாக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த ஹரி, இனியும் வெயிட் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம் என்று இப்போது சிங்கம்-3 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை கோல்கட்டாவில் நடத்த முடிவு செய்திருக்கிறாராம். அதற்காக இன்னும் சில தினங்களில் சிங்கம்-3 படக்குழு கோல்கட்டாவுக்கு பறக்கிறதாம்.