ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'எந்திரன் 2' படத்திற்காக ரஜினிகாந்திற்கு எப்படிப்பட்ட தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்காவில் விவாதித்து வருகிறார்கள். அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்தும் கடந்த வாரம் அமெரிக்க சென்றார். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஷங்கர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவராத அளவிற்கு இந்தப் படத்தை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இன்னும் பத்து நாட்கள் இருப்பதால் அதற்குள் 'எந்திரன் 2' படத்தில் ரஜினிகாந்த் எப்படி இருக்கப் போகிறார் என்பதை முடிவு செய்து விடுவார்களாம். அதற்கான தோற்ற மாதிரியை உருவாக்கி ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஜனவரி மாதத்தில் 'எந்திரன் 2' படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் என்கிறார்கள். ஒரு வருட காலத்திற்கு படப்பிடிப்பு நடந்து 2017ம் ஆண்டு பொங்கலுக்கோ, கோடை விடுமுறைக்கோ படம் வெளிவரும் என்கிறார்கள். ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'கபாலி' படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடையவும் வாய்ப்புள்ளதாம். அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்ததும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிடவும் முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
'கபாலி' முதல் பார்வை வெளியான போதே பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அப்படியிருக்க ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று 'எந்திரன் 2' படத்தின் முதல் பார்வை வெளிவந்தால் அது அவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.