மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கபாலி படத்தின் பாடல்களில் ஒன்று சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரவியதைக் கண்டு கபாலி குழுவினர் அதிர்ச்சியடைந்ததைவிட ரஜினி ரசிகர்கள்தான் அதிகமாக அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இன்றைய இணைய உலக வளர்ச்சியில் மொபைல் போன் பயன்பாடும் அதிகமாக வளர்ந்துவிட்ட நிலையில் மிகவும் கவனமாகச் செயல்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக ஏற்கெனவே பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், படப்பிடிப்புச் சமயத்திலேயே ரஜினிகாந்த் நடிக்கும் படமொன்றில் பாடல் இப்படி லீக் ஆகியிருப்பது திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியப் படப்பிடிப்பைப் பொறுத்தவரையில் கடுமையான அணுகுமுறைகளை படப்பிடிப்புக் குழுவினர் கடைபிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஜினிகாந்தின் கடந்த சில படங்கள் தமிழ்நாட்டில் கூட அதிகமாகப் படம் பிடிக்கப்பட்டது கிடையாது. ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படப்பிடிப்பில் அப்படி ஒரு பாதுகாப்பு இருக்கும். ஒரு புகைப்படம் கூட தப்பித் தவறி வெளியாகாது. அவ்வளவு ஏன் விஜய்யின் தெறி படப்பிடிப்புப் புகைப்படங்கள் கூட அதிகம் வெளியாகவில்லை, ஆனால், அஜித்தின் வேதாளம் படப்பிடிப்புப் புகைப்படங்கள் அதிகம் லீக் ஆகின.
ஏதோ ஒரு ஆசையில் விபரீதம் தெரியாத சிலர் வெளியிடுவதால் ரஜினிகாந்த் போன்ற முக்கிய நடிகர்களின் படங்களின் விஷயங்கள் முன்னரே வெளியாவது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதைப் பரப்புபவர்கள் உணர்வதில்லை. கபாலி படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் கடுமையான அணுகுமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே இந்த லீக்குகளைத் தவிர்க்க முடியும், அதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.