ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கலைப்புலி' தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தில் வித்தியாசமான மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் விஜய். மூன்று தோற்றங்களில் நடித்தாலும் படத்தில் விஜய்க்கு ஒரு கேரக்டர்தான். கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக தெறி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் கோவாவுக்கு இடம்பெயர்ந்தது தெறி படக்குழு. கோவாவைத் தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திலீப் சுப்பாராயன் மாஸ்டரின் இயக்கத்தில் அங்கே பரபரப்பான சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
இந்த ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர் ஒருவரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் 5 ஆம் பாகத்தில் ஸ்டன்ட் டிரைவராகப் பணியாற்றிய Mauro Calo என்பவர் 'தெறி' படத்தின் ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதில் திலீப் சுப்பாராயன் உடன் இணைந்து பங்கு வகித்திருக்கிறாராம். இந்த தகவலை தெறி படத்தின் இயக்குனர் அட்லி வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், இயக்குனர் அட்லி, மாஸ்டர் திலீப் சுப்பாராயன் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.