ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷாரூக்கான, கஜோல் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். இதற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிடையே விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென்று தனி வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் தற்போது திரையுலகத்தில் பின்னணிப் பாடகர், பாடகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அவ்வப் போது சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பது வழக்கம். அந்த விதத்தில் 'தில்வாலே' படத்தின் பிரமோஷனுக்காக ஷாரூக்கான், கஜோல் கலந்து கொண்டுள்ளார்கள்.
ஒரு ஹிந்திப் படத்திற்காக தமிழ் டிவி ஒன்றில் ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோர் “புலி, வேதாளம்” ஆகிய படங்களின் பிரமோஷனுக்காக எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அஜித் டிவி பேட்டிகளில் கலந்து கொண்டு சுமார் 8 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், ஹிந்தி நட்சத்திரங்கள் அவர்களது படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக எதையும் செய்யத் தயாராகவே இருப்பார்கள்.
'தில்வாலே' படம் தமிழ்நாட்டிலும் ஓடுவதற்காக ஷாரூக்கான் எடுத்திருக்கும் மார்க்கெட்டிங் விஷயம்தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதற்கான காரணம்.