ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பை கெளதம்மேனன் தொடங்கியிருந்த போதுதான், எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் அவருக்கு கிடத்தது. அதனால் சிம்பு படத்தை நிறுத்தி வைத்து விட்டு, அஜீத்தின் என்னை அறிந்தால் பட வேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன். அதனால் அந்த கேப்பில் இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்தார் சிம்பு.
அதேபோல் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருந்தார் கோலிசோடா விஜய்மில்டன். ஆனால் அந்த நேரம் பார்த்து விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே, டி.ஆர்., நடிக்கயிருந்த படத்தை தள்ளி வைத்து விட்டு, பத்து எண்றதுக்குள்ள படத்தை தொடங்கினார் விஜய்மில்டன். சில மாதங்களுக்கு முன்பே அந்த படம் திரைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில், அடுத்து மீண்டும் கோலிசோடா மாதிரி ஒரு படத்தை விஜய்மில்டன் தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் கிடப்பில் போட்டிருந்த டி.ஆர்., நடிக்கும் படவேலைகளையே தற்போது தொடங்கியிருக்கிறார். அந்த படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டி ருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளிடமும் கால்சீட் பேசி வரும் விஜய்மில்டன், கோலிசோடா படத்தைப் போலவே டி.ஆர்., நடிக்கும் படத்தையும் தானே தயாரித்து இயக்குகிறார்.