ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெர்ரி போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர் பாடலாசிரியர் பா.விஜய். வைரமுத்துவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய கவிஞராக வரவேண்டிய இவர், நடிப்பில் தனது கவனத்தை திருப்பியதால் அவருக்கான பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்தன. அதோடு அவரைத் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த நா.முத்துக்குமார் பின்னர் முன்னணி இடத்தை கைப்பற்றினார்.
இந்த நிலையில், நடிப்பின் மீதான ஆர்வத்தில் நீங்கள் பாடல் எழுதுவதை குறைத்துக்கொண்டு வருவதாக கூறப்படுகிறதே? என்று பா.விஜய்யிடத்தில் கேட்டால், நான் சினிமாவில் பாடலாசிரியராகத்தான் வந்தேன். பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறேன். ஆட்டோகிராப் படத்தில் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றேன். அந்த வகையில், எப்போதுமே நான் பாடலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்
ஆனால், நான் நடிக்கத் தொடங்கிய பிறகு சில சினிமாக்காரர்கள் எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகமாகி பாடல் எழுதுவதில் குறைந்து விட்டதாக அவர்களாகவே நினைத்துக்கொண்டு என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதேபோல் மீடியாக்களும் நான் முன்பு மாதிரி பாடல் எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவிலலை என்று செய்திகள் வெளியிட்டு வந்தன. இப்படித்தான் எனக்கான பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்து போயின. இருப்பினும் தற்போது மறுபடியும் நிறைய பாடல்ள் எழுதுகிறேன். அந்த வகையில், பாடல் எழுதுவதற்கு இடையூறு ஏற்படாத வகையில்தான் நடித்து வருகிறேன். மற்றபடி நான் பாடல் எழுதமாட்டேன் என்று யாரிடமும் இதுவரை சொன்னதில்லை.
அதோடு, ஸ்ட்ராபெர்ரி படத்தை இயக்கி நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து இப்போது நய்யப்புடை என்ற படத்தில் நடிக்கிறேன். இது ஒரு அதிரடியான படம். நடிப்பில் எனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தி வருகிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு நடிப்பிலும் எனக்கான இடம் கிடைத்து விடும் என்கிறார் பா.விஜய்.