ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்புபோல மலையாளப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் மோகம் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் வெற்றி பெற்ற மலையாள படங்களை வாங்கி பலரும் தமிழில் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டிவருவதுதான். கடைசியாக மலையாள டப்பிங் என வெளியான படம் என்றால் மோகன்லால் நடித்த 'கர்மயோதா'வாகத்தான் இருக்கும். இப்போது துவண்டுகிடந்த அந்தப்பணியை தூக்கி நிறுத்தும் வேலையை மலையாளத்தில் வெளியான 'தி மெட்ரோ' படத்தின் மூலம் மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்.
2011ல் மலையாளத்தில் பிபின் பிரபாகர் இயக்கத்தில் வெளியான 'தி மெட்ரோ' படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட முக்கிய காரணம் அதில் சரத்குமார், பாவனா, நிவின்பாலி என தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த முகங்கள் இருப்பது தான். இந்தப்படத்தில் சரத்குமார் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும், பாவனா அவரது தங்கையாகவும் நடித்துள்ளார்கள். நிவின்பாலி நடிக்க வந்த புதிது என்பதால் நான்கு இளைஞர்களில் ஒருவராக நடித்துள்ளார். தேவையில்லாமல் ஒரு ரவுடி கும்பலை சீண்டி மாட்டிக்கொள்ளும் நான்கு இளைஞர்களை போலீஸ் அதிகாரியான சரத்குமார் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. கிட்டத்தட்ட ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் என்பதால் படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.