ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
களவாணி படத்திற்காக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் ஓவியா. முதல் படமே ஹிட்டானதால் சீக்கிரமே முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், பின்னர் நடித்த படங்கள் ஓடாததால் மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்தார். அதனால் சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் படு கவர்ச்சியான ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஹோம்லி, கிளாமர் என இரண்டுவிதமான கதைகளிலும் தற்போது நடித்து வரும் ஓவியா, சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்தார். மேலும், முன்பெல்லாம் ஹீரோ வேல்யூ பார்த்தவர் இப்போது அப்படி எதுவும் பார்ப்பதில்லை. நல்ல ரோல் கிடைத்தால் போதும் சிறிய நடிகர்களின் படமாக இருந்தாலும் உடனே ஓகே செய்து விடுகிறார். அதனால் தற்போது ஓவியாவின் கைவசம் ஹலோ நான் பேய் பேசுறேன், சீனி, 144 உள்பட பல படங்கள் உள்ளன.
இந்த நிலையில், அழகர்சாமியின் குதிரை, மன்னாரு படங்களைத் தொடர்ந்து தற்போது சுழியம் ஏழு என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் அப்புக்குட்டி அடுத்து நடிக்கயிருக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஓவியா. முதலில் அப்புக்குட்டி காமெடி நடிகர் என்பதால் சற்றே தயங்கிய ஓவியாவிடம், அவரது கேரக்டர் பற்றி சொன்னதும் சம்மதம் சொல்லி விட்டாராம். இந்த படத்தில் களவாணி, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தது போன்று குடும்பப் பாங்கான ஒரு அழுத்தமாக கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் ஓவியா.