ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீதிபதிகளை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், கவிஞர் வைரமுத்து சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மறைந்த நீதிபதி கைலாசம் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, சென்னையில், செப்டம்பரில் நடந்தது. நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து நீதிபதிகளை அவமதிப்பது போன்று விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர், நீதிபதிகளின் நேர்மையை, அவர்கள் மீதான நம்பிக்கையை, பொதுமக்கள் சந்தேக கண்ணோடு பார்க்கும் வகையில், வைரமுத்து பேச்சு அமைந்துள்ளது, எனவே அவருக்கு எதிராக தானாக முன்வந்து நீதிமன்றம் வைரமுத்து மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டு கொண்டார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய அமர்வு நீதிமன்றம், வைரமுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுதாகர் மற்றும் பிஎன்.பிரகாஷ் முன்னிலையில் வைரமுத்து ஆஜரானார். அப்போது தமது தரப்பில் சில விளக்கங்களை வைரமுத்து அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.