ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுடில்லி : இந்தியாவில் பாதுகாப்பு இல்லை. பிரபலங்கள் தாங்கள் பெற்றிருந்த விருதுகளை திருப்பித்தருவதன் மூலம், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இதில் எந்தவொரு தவறுமில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. பிரபலங்கள், தங்களுக்கு உரிய முறையில் விருதுகளை திருப்பித்தந்து அகிம்சை முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான் பேசியதாவது, இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இந்த அசாதாரண நிலை நிலவி வருகிறது. பாதுகாப்பில்லாத சூழ்நிலையை, மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கூட என் மனைவி கிரண் என்னிடம் வந்து, நாம் வேண்டுமென்றால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா?, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை என்றார் அமீர் கான்.
அமீர் கானின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தியா தான், அமீர்கானை உச்சநட்சத்திரமாக மாற்றியது. இவர் இந்தியாவை விட்டு வெளியறே வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கவே கூடாது.
தன்னை தைரியசாலி என்று கூறிக்கொள்ளும் அமீர்கான், கோழை போல் தப்பித்து ஓடலாமா என்று கேள்விக்கணைகள் அமீர் கான் மீது தொடர்ந்து பாய்ந்த வண்ணம் உள்ளன.
விஸ்வரூபம் பட பிரச்னையின் போது, நடிகர் கமல்ஹாசனும், நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமீர்கானின் இந்த பேச்சு தொடர்பாக டில்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமீர்கானின் கருத்திற்கு எதிர்ப்பு பலர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் அவரது உருவ பொம்மையை எரித்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அமீர்கானின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளதால், அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.