சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் ''கதகளி''. இந்த படத்தின் டைட்டில் 'கதகளி' என்று கேரளத்து நடனத்தின் பெயராக இருப்பதால் இது நடனம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள படமாக இருக்குமோ? என்று விசாரித்தால், நடனம் சம்பந்தப்பட்ட கதையில்லை, கிராமத்தில் நடக்கும் பங்காளி பிரச்னை சம்பந்தப்பட்ட கதை என்கிறார்கள். அதேசமயம், இந்த டைட்டில் வைத்ததற்கு வேறொரு காரணம் உள்ளது என்கிறார்கள். அதோடு, இந்த படம் செண்டிமென்ட், காதல், காமெடி, ஆக்சன் கலந்த கதையில் உருவாகியிருக்கிறதாம். கிராமத்து படங்களில் காமெடியில் வெளுத்து வாங்கி வரும் சூரி, இந்த படத்தில் முந்தைய பட காமெடிகளை ஓவர்டேக் செய்திருக்கிறாராம். கூடவே காமெடி காட்சிகளில் சூரியுடன் இணைந்து விஷாலும் கலக்கியிருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தை இயக்கிக்கொண்டே பசங்க-2, இது நம்ம ஆளு படவேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்த பாண்டிராஜ், பொங்கலுக்கு கதகளியை வெளியிட வேண்டும் என்பதால், அவசரகதியில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார். இந்த மாதம் தொடக்கத்திலேயே படப்பிடிப்பை முடித்தவர்கள், பின்னர் எடிட்டிங்கை முடித்தபோது பேட்ஜ் ஒர்க் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்ததாம். அதனால், நேற்று முன்தினம் வரை சென்னையிலுள்ள பின்னி மில்லில் விஷால், வில்லன் ஆத்மா மற்றும் கேத்ரின் தெரசா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கியுள்ளார். இதற்கிடையே இறுதிகட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ள பாண்டிராஜ், இன்னும் சில தினங்களில் டப்பிங் வேலைகளை தொடங்குகிறாராம்.