ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் ஐ. இந்த படத்திற்காக இரண்டறை ஆண்டுகளாக கடுமையாக உழைத்தார் விக்ரம். தனது உடம்பை நோயாளி போன்று மாற்றி நடித்ததோடு, ஆணழகனாகவும் நடித்தார். ஆனால் பிரமாண்டத்தில் கவனம் செலுத்திய அளவுக்கு கதையில் கவனம் செலுத்தாததால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்து ரஜினியை வைத்து தான் இயக்கும் எந்திரன்-2 படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்று பல மாதங்களாக அதற்கான முதல்கட்ட வேலைகளை முடுக்கி விட்டுள்ளார் ஷங்கர்.
மேலும், எந்திரன் படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியவர், எந்திரன்-2 படத்தை பாகுபலியை விட அதிகப்படியான பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அதன்காரணமாக, இப்படத்தில் அர்னால்டு போன்ற ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைத்து படத்தை இன்னும் பிரமாண்டப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கும் ஷங்கர், தற்போது எந்திரன்-2 படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தொடங்கி விட்டார். அதற்காக ஹாலிவுட் டெக்னீஷியன்களுடன் அவர் அமெரிக்காவில் முகாமிட்டிருக்கிறார்.
அதோடு, படத்தில் நடிக்கும் சில நடிகர்களை அழைத்து கிராபிக்ஸ் காட்சிகளுக்கான ஒத்திகைகளை நடத்தி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே எமிஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள் அதில் கலந்து கொண்டதை அடுத்து விரைவில் ரஜினியும் கலந்து கொள்கிறாராம். அதனால் கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்ததும் அமெரிக்கா செல்லும் ரஜினி, கிராபிக்ஸ் ஒத்திகைகளில் கலந்து கொண்ட பிறகே கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.