ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நீண்ட இடைவெளிக்கு பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் வது முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்ட படத்திற்கு தமிழன் என்று சொல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படபூஜை விழா சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய விஜயகாந்த், மீண்டும் நடிக்க கூடாது என பிடிவாதமாக தான் இருந்தேன். இது தமிழ் மொழிக்கான படம் என்பதால் நடிக்கிறேன். என் மனைவியும், எனது மூத்த மகனும் கூறியதால் நடிக்கிறேன். இந்த படத்தின் கதை சொல்லும் போதே டைரக்டர் கண்ணில் ஒரு வெறி தெரிந்தது. அவரிடம் கதை கேட்ட பிறகும் 4 முறை யோசித்தேன். வேறு யாராவது பெரிய நடிகரை வைத்து இந்த படத்தை எடுங்கள் என டைரக்டரிடம் கூறினேன். ஆனால் அவர், நான் தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் வைக்காத பெயர், தமிழன் என்று சொல். படத்தின் போஸ்டரில் என்ன விஜயகாந்த் கத்தியுடன் இருக்கிறார் என அனைவரும் நினைக்கலாம். ஆனால் நிச்சயம் இது ஒரு மாறுபட்ட படமாக இருக்கும். எழுச்சிகரமாக படமாகவும் இருக்கும்.
இந்த படத்தை பொறுத்தவரை டைரக்டர், தயாரிப்பாளர் என அனைவரும் உங்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளாக நடித்து வருபவன் என்ற முறையில் எனக்கு அனைவரும் பழக்கமானவர்கள். அந்தவகையில் தமிழுக்கும், தமிழன் என்ற சொல்லுக்கும் சொந்தக்காரன் நான். பழக்கப்பட்ட முகங்கள் தான். எனக்கு நடிக்க தெரியாது. மனதில்பட்டதை பேசுகிறேன். இது, என் மகனுக்காக நான் நடிக்கும் படம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். என் மகனை வளர்த்து விடுவதற்காக நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
பிறகு பேசிய படத்தின் ஹீரோ சண்முகபாண்டியன், சகாப்தம் படத்திற்கு பிறகு 50,60 கதைகள் கேட்டோம். அது எதுவும் எனக்கு பொருத்தமானதாக இல்லை. அம்மாவும், அண்ணனும் இந்த கதையை கேட்டு விட்டு, நடிக்க சொன்னார்கள். இந்த படம் தமிழன் யாரென்று உலகத்திற்கு கூறும் படமாக இருக்கும் என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் கிச்சா பாத்தி பேசுகையில், இந்த படத்தில் சண்முகப்பாண்டியனில் நண்பர் ஜீவாவும் நானும் இணைந்து இசையமைக்கிறோம். இந்த படத்திற்காக தமிழில் பல ஆராய்ச்சிகள் செய்து, அதனை பாடல்களில் புகுத்த உள்ளேன். கேப்டனுக்காக படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அது இந்த படத்தின் மூலம் நிறைவேற உள்ளது என்றார்.