ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதிராஜாவுக்கு இயக்குநர் இமயம் என்று பட்டம் கொடுக்கப்பட்டாலும், அவர் இயக்கியது எல்லாம் பெரும்பாலும் காதல் படங்களே. அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் இயக்கிய அன்னக்கொடி காதல் படம் கூட இல்லை.
சமூகப்பிரச்சனைகளை மையப்படுத்தி, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை மையப்படுத்தியோ அவர் பெரும்பாலும் படம் எடுத்ததில்லை. கருத்தம்மா போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த குற்ற உணர்ச்சி பாரதிராஜாவுக்கே இருந்திருக்க வேண்டும். அதனாலோ என்னவோ கடந்தகால சரித்திரமான குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதை சுமார் 25 வருடங்களாக பத்திரிகை பேட்டிகளில் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதற்கான பிள்ளையார்சுழியைக்கூட அவர் போடவில்லை.
பல வருடங்களாக பாரதிராஜா சொல்லிக்கொண்...................................டே இருந்த விஷயத்தை இயக்குநர் பாலா இப்போது செயலில் காட்டிவிட்டார். பாகுபலி படத்தைப் போல் பேர் சொல்லும் அளவுக்கு ஒரு பீரியட் பிலிமை எடுக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்த பாலா, ஆர்யா, விஷால், அதர்வா, அரவிந்த் சாமி, ராணா ஆகியோரை வைத்து மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இது குற்றப்பரம்பரை பற்றிய பீரியட் பிலிம்.
இந்தப் படத்தைப் பற்றிய ஆவணப்படங்கள் ஏற்கனவே உள்ளன. முழுநீள திரைப்படமாக எடுக்க யாரும் முயற்சி செய்யவில்லை. முதன்முறையாக பாலா களத்தில் இறங்கி இருக்கிறார். குற்றப்பரம்பரை படம் வெற்றியடைகிறதோ இல்லையோ. பாரதிராஜாவினால் செய்ய முடியாததை பாலா செய்தார் என்பதே வெற்றிதான்.