ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் நடிக்க வந்து சில ஆண்டுகளில் இருந்தே காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருபவர் நயன்தாரா. அப்படி அவரை சிம்பு, பிரபுதேவாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட காதல் செய்திகள் பின்னர் உண்மையாகி விட்டன. ஆனால் அவரது காதலில் என்ன குறைபாடோ தெரியவில்லை உடனுக்குடன் நோ டீலில் முடிந்து விடுகிறது. மேலும், வல்லவன் படத்தில் நடித்தபோது காதலித்த சிம்புவுடன் தற்போது மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதேசமயம், பிரபுதேவாவின் பெயரை யாராவது உச்சரித்தாலே அவரது முகம் வாடிப்போய் விடுகிறது.
இந்த நிலையில், தற்போது மூன்றாவதாக நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா. இது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதில் இருந்தே மீடியாக்களில் பரபரப்பாக பரவிக்கொண்டு வருகிறது. அதையடுத்து, அப்படத்தின் பிரஸ்மீட்டில் மேடையில் பேசிய பார்த்திபன் உள்ளிட்ட சிலரும் எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாய், விக்னேஷ்சிவனை மேடையில் வைத்துக்கொண்டே அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார்கள்.
ஆனால், இப்படி அவர்கள் பேசியது நயன்தாராவின காதுக்கு சென்றபோது ரொம்பவே டென்சனாகி விட்டாராம். காரணம், பத்திரிகைகளில் விக்னேஷ்சிவனுடன் தன்னை இணைத்து செய்தி வெளியானபோது அதை பொருட்படுத்தாத நயன்தாராவினால் அவர்கள் மேடை போட்டு பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். அதனால் சம்பந்தப்பட்ட சிலரை தொடர்பு கொண்டு, என்னைப் பற்றி செய்தி பரப்பி விட்டு, மீடியாக்களுக்கு தீனி போடும் வேலையை இத்தோடு விட்டுவிடுங்கள் என்று எச்சரித்தாராம். இதனால் விளையாட்டாக பேசப்போய் இப்படி நடிகையின் கோபத்துக்கு ஆளாகி விட்டோமே என்று அவர்கள் பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்களாம்.