சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்-அஜீத் இருவரும் நண்பர்களாக நடித்தனர். அதன்பிறகு நேருக்கு நேர் படத்திலும் விஜய்-அஜீத்தை இணைந்து நடிக்க வைக்க டைரக்டர் வசந்த் முயற்சி செய்தார். ஆனால், அஜீத்தின் கால்சீட் அப்போது கிடைக்காததால் சூர்யாவை கமிட் பண்ணினார். ஆக, அந்த படம்தான் சூர்யாவுக்கு முதல் படமாக அமைந்தது. மேலும், ஆரம்பத்தில இருந்தே விஜய்-அஜீத் இருவரும் நண்பர்கள் என்றபோதும், அவர்கள் எந்த சினிமா விழாக்களிலும் ஒன்றாக கலந்து கொண்டதில்லை. முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களாக இருந்தாலும், விஜய் முதலில் சென்றால், அதன்பிறகு அஜீத் அந்த விழாவுக்கு செல்வார். இப்படி இருவரும் தனித்தனி நேரங்களிலேயே விசிட் அடித்து வருகின்றனர். அதோடு, அவர்களை மீண்டும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க வைக்க டைரக்டர் வெங்கட்பிரபு போன்றவர்கள் எடுத்த முயற்சிகளும் ஒர்க்அவுட்டாகவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அஜீத்தின் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அஜீத்தை விஜய் நேரில் சென்று நலம் விசாரித்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அஜீத்தரப்பில் இதுபற்றி விசாரித்தால், அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது வெளிநபர்கள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அது இப்போதுவரை தொடர்கிறது. அஜீத் ஓய்வில் இருப்பதால் அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று நட்பு வட்டாரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் யாருமே அவரை பார்க்கவும் வரவில்லை. அதேபோல், விஜய்யும் அஜீத்தை நலம் விசாரிக்க வரவில்லை. அஜீத்தை விஜய் நேரில் சென்று நலம் விசாரித்ததாக வெளியான செய்தி தவறானது என்கிறார்கள்.