ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாடு அரசு தமிழில் பெயர் வைத்து, தமிழ் கலாச்சாரத்தை உயர்த்தி பிடித்து, யு சான்றிதழ் பெறும் படங்களுக்கு கேளிக்கை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்து வருகிறது. ஆனால் இந்த சலுகையை தியேட்டர்காரர்களும், தயாரிப்பாளர்களுமே எடுத்துக் கொள்கிறார்கள். வரிவிலக்கு பெற்ற படமாக இருந்தாலும் மக்கள் முழு கட்டணத்தையும் செலுத்தித்தான் பார்க்கிறார்கள்.
இதை எதிர்த்து சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் "வரிவிலக்கு சலுகை மக்களுக்கு செல்ல வேண்டும் என்றும் இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது,
இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் தியேட்டர்கள் நடத்தும் ஐநாக்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வரிச்சலுகை மக்களுக்கு சேர வேண்டும் என்கிற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து எதிர்மனுதாரர் வருகிற டிசம்பர் 2ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.