ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி 'புலி' படத்தில் நடித்தது அந்தப் படத்தின் ஹைலைட்டாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றாக இருந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய்யைப் பற்றியும், படக் குழுவினரைப் பற்றியும் பாராட்டிப் பேசினார் ஸ்ரீதேவி. ஆனால், படம் வெளிவந்து தோல்வி என ரிசல்ட் வந்தவுடன் தனக்கு 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி தர வேண்டுமென தயாரிப்பாளர்கள் மீது மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அதற்கு 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களும் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்கள். படத்தின் ஹீரோயின்களான ஸ்ருதிஹாசன், ஹன்சிகா அளவிற்கு ஸ்ரீதேவிக்கும் அனைத்து விளம்பரங்களிலும் முக்கியத்துவம் தரப்பட்டது.
இருந்தாலும் ஸ்ரீதேவி ஒரு பக்கம் சம்பள பாக்கிக்காக புகார் கொடுத்திருக்க மற்றொரு பக்கம் ஸ்ருதிஹாசன் தயாரிப்பாளர்களுக்காக தன்னுடைய சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகையான சுமார் 20 லட்ச ரூபாய் வரை அவர் வேண்டாமென சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. பட வெளியீட்டிற்கு முந்தைய நாள் வருமான வரி சோதனை, தியேட்டர்களில் திட்டமிட்ட பட வெளியாகுமா என வெளிவரும் சமயத்தில் பல தடங்களைச் சந்திக்க ஆரம்பித்தது 'புலி'. இருந்தாலும் படத்தின் நாயகன் விஜய்யும் தன் சம்பளத்தில் சில கோடிகளை ஏற்கெனவே விட்டுக் கொடுத்துவிட்டார் என்கிறார்கள். இப்போது ஸ்ருதிஹாசனும் விட்டுக் கொடுத்துள்ளார், அந்த மனம் ஏன் ஸ்ரீதேவிக்கு வரவில்லை என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
இனி, ஸ்ரீதேவியை தமிழ்த் திரையுலகம் திரும்ப அழைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.