ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நாகராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சிலை அகற்றுவது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு, சிவாஜிக்கு மணிமண்டம் கட்டுகிறோம், அதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும். மணிமண்டபம் கட்டி முடித்ததும் சிலையை அகற்றி மணி மண்டபத்தில் வைப்போம் என்றது.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் என்பது அதிகம், வருகிற 16ந் தேதிக்குள் சிலையை அகற்றி விட்டு அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் 2016, செப்டம்பருக்குள் சிவாஜி சிலையை அகற்ற உறுதியளிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றது. மேலும் செப்., 2016க்குள் சிலையை அகற்றி விட வேண்டும் என்றும், அதற்கு மேல் காலஅவகாசம் கேட்க கூடாது என்றும் நீதிபதிகள் ஜோசப், அருண் மிஸ்ரா உத்தரவிட்டனர்.