ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாட்டில் பெருகி வரும் சகிப்புதன்மையின்மைக்கு எதிராகவும், எழுத்தாளர்கள், தாக்கப்படுவதை, கொல்லப்படுவதை கண்டித்தும் பல்துறையை சார்ந்தவர்கள் தங்களுக்கு அரசு கொடுத்த விருதை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். இதுகுறித்து கமல்ஹாசன் குறிப்பிடும்போது "விருது என்பது எந்த அரசோ அல்லது அரசியல்கட்சியோ தருவல்ல 12 அறிஞர்கள் தருகிறார்கள். அதனை திருப்பிக் கொடுப்பது அந்த அறிஞர்களை அவமானப்படுத்தும் செயல். எந்தவொன்றுக்கும் எதிர்ப்பை காட்ட பல வழிகள் இருக்கிறது. விருதை திருப்பி கொடுப்பது சரியான வழி அல்ல. அதனால் எந்த தீர்வும் ஏற்பட்டு விடாது" என்று கூறியிருந்தார்.
தற்போது இதே கருத்தை 3 முறை தேசிய விருது பெற்றவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான வைரமுத்து கூறியுள்ளார். சார்ஜாவில் நடந்த அவரது சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது இந்த கருத்தை வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
ஒரு சில படைப்பாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளை திருப்பி கொடுத்து வருகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. விருதுகளை கொடுப்பது அரசு அல்ல. அறிஞர்களை கொண்ட குழு. அதனை திருப்பி கொடுப்பது அந்த அறிஞர்களை அவமதிப்பதாகும். ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் உச்சகட்ட மகிழ்ச்சி அவனுக்கு கிடைக்கும் தைட்டல்கள்தான். இடக்கரமும், வலக்கரமும் இணைந்து எழுப்பும் ஓசை ஆன்மாவை உசுப்பும். என்றார் வைரமுத்து.