ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
புதுச்சேரியில் அந்த மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் 93வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது. சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு இயல் இசை நாடக நடிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவகங்கை காந்தி தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நாசர் பேசியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவி என்பது 3 ஆண்டுகள்தான். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களில் நானும் ஒருவன் என்பது நிரந்தர பதவி. அந்த அடிப்படையில்தான் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். நாடக கலைஞர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தைரியத்துடனும், மனத் தெளிவுடனும் இருக்கிறார்கள். அது சினிமா நடிகர்களிடம் கிடையாது.
நாடக கலை தற்போது வெறும் சடங்காக மாறியிருக்கிறது. நாடக கலைஞர்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட உதவிகள் செய்தால் மட்டும் போதாது நாடக கலையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நாடக கலையை உலக அளவில் கொண்டு செல்வதற்காக அதற்குரிய நிபுணர்களை கொண்டு முயற்சி எடுத்து வருகிறோம். நாடக கலைஞர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் அவர்களே தங்களை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் நாடகத்தின் வீரியத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.
பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாடகங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதுபோன்ற ஒரு நிலையை உருவாக்குவோம். எங்களது பதவி காலத்திற்குள் சங்கரதாஸ் சுவாமிகளின் ஒரு நாடகத்தையாவது மேடையேற்றுவோம். புதுவை பல்கலைகழகத்தில் சங்கராதாஸ் சுவாமிகளின் பெயரில் உள்ள நிகழ் கலைத்துறையின் பெயரை மாற்றக்கூடாது. அடுத்த ஆண்டு இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவோம். இவ்வாறு நாசர் பேசினார்.