ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. இவர் சென்னைவாசியாக இருந்தபோதும், பின்னர் தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி விட்டதால் ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி குடியேறி விட்டார். அந்த வகையில், அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழிலும் அதிக கவனம் செலுத்தியபோதும் ஐதராபாத்தில் இருந்து வெளியேறவில்லை சமந்தா. அங்கு முகாமிட்டபடியே தமிழ்ப்படங்களில் நடித்து விட்டு செல்கிறார்.
மேலும், பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பிறகு தனுசுடன் தங்கமகன், சூர்யாவுடன் 24 படங்களை முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய்யின் 59வது படத்திலும் நடித்து விட்டார். இதையடுத்து தமிழ் தெலுங்கில் உருவாகும் பிரமோற்சவம் உள்பட சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்திலும் நடிக்கிறார்.
இந்த படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான சமந்தாவை பார்க்கலாமாம். முக்கியமாக முகத்தில் ஒரு துளி மேக்கப்கூட போடாமல், தனது முகத்தை இன்னும் சற்று கருமையாக்கிக் கொண்டே நடிக்கப்போகிறாராம் சமந்தா. சேரிப் பெண் வேடம் என்பதால், வடசென்னை ஸ்லம் ஏரியா பெண்கள் பேசுவது போன்று சென்னை தமிழ் பேசி நடிக்கிறாராம். அதனால் தனுஷைப்போன்று சமந்தாவுக்கும் சென்னை தமிழ் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த படத்தில் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசுகிறாராம் சமந்தா. அதனால்தான் முன்கூட்டியே சென்னை தமிழை உள்வாங்கிக்கொள்ளப்போகிறாராம் அவர்.