ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து சூர்யாவின் 24 படத்தில் நடித்துள்ளார் நித்யாமேனன். அதையடுத்தும் சில புதிய படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர், எல்லா விசயங்களிலுமே ரொம்ப கண்டிசனாக பேசுவதாக திரையுலகில் சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இதுபற்றி நித்யாமேனனிடம் கேட்டால், ரொம்பவே டென்சனாகிறார். அதோடு, என்னைப்பற்றி யார் எந்தமாதிரி பேசினாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நானாகவே இருப்பேன். எதற்காகவும், யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று சூடாக பேசுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை சினிமாவில் நடிக்கத்தான் வந்திருக்கிறேன். அந்த வேலையை மட்டும் சரியாக செய்வேன். மற்றபடி யாருடனும் நெருக்கமாக பழகமாட்டேன். அது எனக்கு பிடிக்காது. முக்கியமாக பார்ட்டிகளுக்கு நான் செல்வதே இல்லை. அதன்காரணமாககூட என்னை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என் வேலை நடிப்பது மட்டுமே.
அதோடு, நான் உயரம் குறைவாக, குண்டு பெண்ணாக இருப்பதையும் சிலர் விமர்சிக்கிறார்கள். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. இறைவன் கொடுத்த உடலமைப்பு அதுதான். அதேசமயம், எத்தனை அதிரடியான வேடங்களை கொடுத்தாலும் அதற்கு தேவையான நடிப்பை நான் வெளிப்படுத்தி விடுவேன். அதில் யாரும் என்னை குறை சொல்லும்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறும் நித்யாமேனன், ரசிகர்களிடமிருந்து இன்னும் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்றாலும், சினிமாவில் உள்ள சக நடிகைகள் எனது நடிப்பை நல்லவிதமாகவே சொல்கிறார்கள். குறிப்பாக, என்னை வைத்து மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை இயக்கிய ஸ்ரீப்ரியா மற்றும் ராதிகா உள்ளிட்ட சீனியர் நடிகைகளே நான் நல்ல நடிகை என்கிறார்கள். அது எனக்கு பெரிய சந்தோசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்கிறார் நித்யாமேனன்.