ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகராக மட்டுமே இருந்த தனுஷை புதுப்பேட்டையிலிருந்து சரவணன் படத்தில் பின்னணி பாடகராக்கியவர் யுவன் ஷங்கர் ராஜா. அந்த படத்தில் நாட்டுக்கட்ட நச்சின்னுதான் இருக்கு என்ற பாடலை பாடினார் தனுஷ். அப்பாடல் ஹிட்டானதால் அதையடுத்து பாடுவதை தொடர்ந்த அவருக்கு, அனிருத் இசையில் பாடிய ஒய் திஸ் கொலவெறி மெகா ஹிட்டானது. அதனால் பின்னர் தொடர்ச்சியாக பாடத் தொடங்கி விட்ட தனுஷ், தனக்கான பாடல்களை தானே எழுதி பாடலாசிரியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, அனேகன், மாரி போன்ற படங்களில் இரண்டு மூன்று பாடல்கள் வீதம் பாடினார் தனுஷ்.
ஆனால் அப்போது, மற்ற ஹீரோக்களுக்கு அவரை பாட அழைத்தபோது, எனது குரல் மற்றவர்களுக்கு செட்டாகாது என்று பாட மறுத்த தனுஷ். எனக்கு மட்டுமேதான் நான் பின்னணி பாடுவேன் என்று மறுத்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த தனுஷிடம், விஜய், அஜீத் போன்ற நடிகர்களுக்கு பின்னணி பாடுவீர்களா? என்று கேட்கப்பட்டபோது, சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக பாடுவேன் என்று கூறினார். ஆரம்பத்தில் தனது குரலை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்கிற சந்தேகத்தில் இருந்து வந்த தனுஷ், சில பாடல்கள் கொடுத்த மெகா ஹிட்டுக்குப்பிறகு தனக்கு ஏற்பட்டுள்ள தைரியத்தில்தான் இப்படி மற்ற நடிகர்களுக்கும் பாடத்தயாராகி விட்டதாக சொல்கிறார்கள்.