ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சென்னை 28, மங்காத்தா' ஆகிய இரண்டு படங்களைத் தவிர வெங்கட் பிரபு இயக்கிய 'சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி' ஆகிய நான்கு படங்களுமே தோல்விப் படங்கள்தான். அதிலும் கடைசி இரண்டு படங்கள் படுதோல்விப் படங்கள். சூர்யாவை வைத்தே வெற்றி கொடுக்க முடியாதவரால் அடுத்து எப்படி வெற்றிப் படங்களைத் தர முடியும் என தயாரிப்பாளர்களிடையே கேள்வி எழுந்தது. அதனால்தான் வெங்கட் பிரபுவுக்கு அடுத்து இயக்கும் வாய்ப்பை யாரும் தரவில்லை என்ற பேச்சு கோலிவுட்டில் உலவுகிறது.
வேறு வழியில்லாமல்தான் சொந்த நிறுவனம் ஆரம்பித்து புதிய படத்தை இயக்க உள்ளார் என்கிறார்கள். அவர் கூப்பிட்டால் உடனே வந்து நடித்துக் கொடுக்கும் அளவிற்கு இப்போது இருப்பவர்கள் 'சென்னை 28' படத்தில் நடித்தவர்களே. அதில் நடித்தவர்கள் அனைவருமே பெரிய வாய்ப்பில்லாமல்தான் இருக்கிறார்கள். அதனால் மீண்டும் அந்தக் குழுவினரை வைத்தே ஒரு படத்தை இயக்கலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம். இருந்தாலும் வெங்கட் பிரபு மீது அசாத்திய நம்பிக்கை வைத்து படத்தை இயக்குனர் கௌதம் மேனனும் இணைந்து தயாரிக்கிறாராம்.
இப்படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.