ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலக நாயகன் கமலஹாசனின் 61வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா கலையரங்கில் கமல் நற்பணி இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட நிகழ்வின் சில துளிகள்...
* பிறந்த நாள் விழாவில் கமலின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை கமல் இத்தனை கோபமாக, இத்தனை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியதில்லை. "நான் ரத்த காயம் பட்டு நிற்கிறேன்" என்று அவர் சொன்னபோது "தலைவா நாங்க இருக்கிறோம்..." என்று ரசிகர்கள் சொன்னது நெகிழ்வான தருணம்.
* விழாவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகிகள் கவுரவிக்கப்ட்டனர். அப்போது 3 அடி உயரமே உள்ள ஒரு ரசிகர் கமலை சந்திக்க வந்தபோது அவர் உயரத்துக்கு கமல் முட்டிபோட்டு அமர்ந்து அவர் வாழ்த்தை பெற்றபோது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
* பரமக்குடி பள்ளிக்கு கமலின் ரசிகர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினார்கள். அந்த பணத்தையும், காசோலைகளையும் அள்ளி அப்படியே அந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தார்.
* மாட்டிறைச்சி, சகிப்புத்தன்மை, அரசியல், விருது திரும்ப ஒப்படைப்பு குறித்து மிக தீர்க்கமாக பேசிய கமல் இந்தி மற்றும் ஆங்கில, சேனல்களுக்காக தனது கருத்தை அதே மேடையில் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மொழிகளிலும் தெரிவித்தார்.
* ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்தபோதும், பரிசாக வந்த சில புத்தகங்களை கையில் எடுத்துக் காட்டி "இவைதான் எனக்கு அளிக்கப்பட்ட பரிசுகளில் சிறப்பானது. இதனை நான் படிப்பேன். படிப்பவர்களுக்கு கொடுப்பேன். சால்வைகளாலும், பொம்மைகளாலும் எந்த பயனும் இல்லை" என்றார்.
* மேடையேறி வாழ்த்த வந்தவர்கள் காலில் விழுந்தபோது தடுத்து, அப்படி செய்யாதீர்கள் என்று கண்டித்து அனுப்பினார். குறிப்பாக பாரதியார் வேடம் அணிந்த குழந்தை காலில் விழ முயன்றபோது பதறிப்போனார்...
* "மரணத்தை கண்டு எனக்கு பயம் இல்லை. மரணத்தை வாழ்வின் ஒரு பகுதியாக கருதுகிறவன். சொர்க்கமும், மரணமும் இந்த பூமியில்தான் இருக்கிறது. இரண்டையும் அனுபவித்துவிட்டுத்தான் போவேன்" என்று அவர் சொன்னபோது ரசிகனின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.