ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஷால் நடித்த பாண்டியநாடு படத்தில் வெற்றியை அறுவடை செய்த சுசீந்திரன், அதே விஷாலை வைத்து அடுத்து இயக்கிய பாயும் புலி படத்தில் வெற்றியைத் தவறவிட்டார். பாயும்புலி படம் தமிழகம் முழுக்க வெறும் 5 கோடிதான் வசூல் செய்தது என்று நடிகர் சங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா நக்கல் அடிக்கும் அளவுக்கு மிகமோசமான தோல்வியை சந்தித்தது பாயும் புலி படம். எனவே சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சில ஹீரோக்கள் கால்ஷீட் கொடுக்கத் தயங்கி உள்ளனர்.
இந்நிலையில், ஜெயம்ரவியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் சுசீந்திரன். ஜெயம்ரவிக்கு அவர் சொன்ன அவுட்லைன் பிடித்துப்போக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். எனவே சுசீந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். அத்துடன் மிருதன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார் ஜெயம் ரவி. பாயும்புலி படத்தில் தவறவிட்ட வெற்றியை அடுத்தப் படத்தில் பெற்றாக வேண்டும் என்ற வெறியோடு தற்போது ஜெயம் ரவி படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாகியுள்ளாரம் சுசீந்திரன் .