ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லத்திகா என்ற படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்தவர் டாக்டர் சீனிவாசன். அந்த படத்தை ஒரே தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓட வைத்த அவர், படம் பார்த்த டிக்கெட்டுடன் தனது அலுவலகத்துக்கு வந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலமும் கொடுத்தார். அதன்பிறகு மற்றவர்கள் தயாரித்த படங்களில் காமெடியனாக தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், சினிமாவில் ஒரு பெரிய இடத்தை எட்டிப்பிடித்து விடுவார் என்று நினைத்த நேரத்தில் மோசடி வழக்கில் சிக்கிய அவர் சிறைக்கம்பிகளையும் எண்ணினார். பின்னர் வெளியே வந்தவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். முன்பு மாதிரி தன்னை பில்டப் பண்ணிக்கொள்ள அவரால் பணத்தை வாரி இறைக்க முடியவில்லை.
காரணம், அவரது வங்கி கணக்கு வழக்குகளை லாக் பண்ணி வைத்து விட்டார்கள். அதனால் பழைய பில்டப்களை ஓரங்கட்டி விட்டு சத்தமில்லாமல் இருக்கிறார் டாக்டர் சீனிவாசன். இருப்பினும், அவர் மீதான மோசடி வழக்குகள் வருகிற மார்ச் மாதத்தோடு முடிவுக்கு வந்து விடுமாம். அதையடுத்து, அவரது வங்கி கணக்குகளும் விடுதலை பெற்று விடுமாம். அதனால் பின்னர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறாராம் அவர். தனது சொந்த பேனரிலேயே நடிப்பதற்காக தற்போது சில டைரக்டர்களிடம் கதை கேட்டும் ஓகே பண்ணி வைத்திருக்கிறார் டாக்டர் சீனிவாசன்.