ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமா என்று அழைக்கப்படும் கோவா சர்வதேச திரைப்படவிழா வருகிற 20ந் தேதி தொடங்கி 30ந் தேதி வரை நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலிமிருந்து சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. உலக புகழ்பெற்ற இயக்குனர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் 12 இந்திய படங்கள் போட்டி பிரிவில் திரையிடப்படுகிறது. இதற்கு 230 படங்கள் விண்ணப்பித்தன. இவற்றில் இருந்து 12 பேர் கொண்ட நடுவர் குழு ரேடியோ பெட்டி (தமிழ்), நானு அவனல்ல அவளு (கன்னடம்), லக்கா சுப்பி, ஓட்டல், ஐன் (மலையாளம்), பஜ்ரானி பைஜான், அன்வர் கா அஜப் கிஸா (இந்தி) உள்பட 26 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் படமான ரேடியோ பெட்டி சமீபத்தில் நடந்த கொரியன் பட விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.