ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தபாண்டியன், கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையாவின் பெயரில் போலி பேஸ்புக் இயங்குவதாகவும், அதன் மூலம் நடிப்பு வாய்ப்பு தருவதாக சிலர் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நான் பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்தவிதமான சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் என் பெயரில் சிலர் சமூக வளைத்தளங்களில் பொய்யான கணக்குகளை தொடங்கி அதில் தவறான தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அதேபோல எனது பெயரை பயன்படுத்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறோம். என்று பலர் போனில் தொடர்பு கொண்டு பலரை மோசடி செய்யும் தகவல்களும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது பெயரில் எந்த சமூக வலைத்தளங்களும் இல்லை என்பதையும். என்பெயரை சொல்லி யார் சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சொன்னாலும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அப்படி ஏமாந்தால் அதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தையா, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.