ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதசகிப்புதன்மை தொடர்பாக சமீபகாலமாக கலைஞர்கள் தங்கள் விருதை திருப்பி அளித்து வருகின்றனர். இதில் கண்டிப்பாக நான் சேரமாட்டேன், எனது விருதை திருப்பி தர மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில், தூங்காவனம் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பான சீகட்டி ராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனிடம், மதசகிப்புத்தன்மை தொடர்பாக சமீபகாலமாக எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள் எல்லாம் விருதை திருப்பி அளித்து வருகின்றனர், இதுப்பற்றி உங்களது கருத்து என்ன.?, நீங்கள் உங்கள் விருதை திருப்பி தருவீர்களா...? என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த கமல்,
கண்டிப்பாக நான் எனது விருதை திருப்பி அளித்து அரசை அவமரியாதை செய்ய மாட்டேன். அரசின் கவனத்தை ஈர்க்க பல வழிகள் இருக்கிறது. விருதை திருப்பி தருவதால் எந்த பயனும் இல்லை. விருதை திருப்பி தந்தவர்கள் எல்லாம் மிகவும் திறமையானவர்கள். இதுபோன்ற விஷயங்களை எதிர்த்து போராட வேண்டும். மதசகிப்புத்தன்மை என்பது 1947ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. அதனால் தான் அப்போது இந்தியா - பாகிஸ்தான் பிரிந்தது. மீண்டும் அப்படி ஒரு சூழல் உருவாகிவிடக்கூடாது. சகிப்புத்தன்மையற்ற போக்கு என்னிடம் கிடையாது. கடவுள் பக்தி இல்லாவிட்டாலும் எல்லா மதங்களிடமும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.