ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தனி ஒருவன்' படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மார்க்கெட் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு முன் வெளிவந்த 'சகல கலா வல்லன்' ஜெயம் ரவியின் மார்க்கெட்டைக் கவிழ்த்திருந்தது. நல்ல வேளையாக 'தனி ஒருவன்' வந்ததால் தப்பித்தார் ஜெயம் ரவி. இப்போது 'நாணயம், நாய்கள் ஜாக்கிரதை' படங்களை இயக்கிய சக்தி எஸ்.ராஜன் இயக்கத்தில் 'மிருதன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பிரபுதேவா தயாரிப்பில் 'ரோமியோ ஜுலியட்' படத்தை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படிப்பட்ட தகவல்களை நம்ப வேண்டாம் என்பது போல ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். “இப்போதைக்கு 'மிருதன்' படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் முடிவடைய உள்ளது. அடுத்து பிரபுதேவா தயாரிப்பில் லஷ்மண் இயக்கத்தில் என்னுடைய 20வது படத்தில் நடிக்கப் போகிறேன். எதிர்கால படங்கள் முடிவான பிறகு அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை 'தனி ஒருவன்' படத்தை ரசித்துக் கொண்டிருங்கள்,” என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி நடித்து இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் 'பூலோகம்' படம் இனியாவது புத்துயிர் பெறுமா அல்லது அப்படியே கிடக்குமா என்பது அப்படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.