ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பாரதிராஜாவும், மகேந்திரனும். பாரதிராஜா மண்சார்ந்த படங்களை இயக்கி புகழ்பெற்றவர் மகேந்திரன் காட்சிவழி கதை சொல்லி உயிர்ப்புமிக்க படங்களை தந்தவர். பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார். மகேந்திரன் இப்போதுதான் விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் பவர்புல் வில்லன் கேரக்டர். வீட்டுக்குள் நல்ல குடும்ப தலைவனாகவும், வெளியில் நாட்டையே விலைபேசும் கொடூரவில்லனாகவும் இருக்கிற கேரக்டர். இந்த கேரக்டரில் ஒரு பவர்புல் இயக்குனர் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் அட்லி முடிவு செய்தார். இதுகுறித்து அவர் பாரதிராஜாவிடம் பேசினார். அவர் ஏற்கெனவே ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக நடித்திருப்பதால் தைரியமாக அவரிடம் கதை சொன்னார். கதையை கேட்டு நடிப்பதாக சொன்ன பாரதிராஜா அதற்காக ஒரு பெரும் தொகை சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பெரிய பட்ஜெட் இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதால் வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது நினைவுக்கு வந்தவர்தான் மகேந்திரன்.
மகேந்திரன் இப்போது படங்கள் எதுவும் இயக்காமல் சென்னை புறநகர் பகுதியில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரிடம் சென்று அட்லி கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட மகேந்திரன் "தம்பி எனக்கு பணம் பெரிதில்லை. ஆனால் நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை" என்று கூறியியிருக்கிறார். அதன் பிறகு விஜய் பேசி மகேந்திரனை சம்மதிக்க வைத்திருக்கிறார். விஜய் சொன்னதற்காக ஒப்புக் கொண்ட மகேந்திரன் இதுவரை சம்பளம் பற்றியோ, எத்தனை நாள் படப்பிடிப்பு என்பது பற்றியோ கேட்காமல் வீட்டுக்கு கம்பெனி கார்வந்தால் ஏறிப்போய் நடித்து விட்டு வருகிறாராம்.
மகேந்திரனின் நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த யூனிட்டே ஆச்சர்யப்பட்டு நிற்கிறதாம். இந்த படத்துல உங்களுக்கு தேசிய விருது நிச்சயம் என்று எல்லோரும் சொல்கிறார்களாம். ஆனால் அதையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் நடித்து திரும்புகிறாராம் மகேந்திரன். ஒரு பெரிய சம்பளத்தை அவருக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் தயாரரிப்பாளர்.