ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1972ல் சிவாஜிகணேசன்- வாணி ஸ்ரீ நடித்த காதல் காவியம் வசந்த மாளிகை. அந்த படத்தை அப்போதைய பிரபல இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். அப்போது சூப்பர் ஹிட்டான வசந்த மாளிகை படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்தார் பிரகாஷ்ராவ். தெலுங்கில் அதிக காதல் படங்களை இயக்கியவர் இவர். 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அவரது மகன் கே.எஸ். ராகவேந்திர ராவும் இயக்குனரானார். இவரும் ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இவரும் தந்தைக்கு இணையாக முன்னணி இயக்குனராக வளர்ந்து நிற்கிறார். இந்த நேரத்தில் ராக வேந்திரா ராவின் மகனான கே.எஸ். பிரகாஷ் தற்போது இஞ்சி இடுப்பழகி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஆக, இவர் மூன்றாம் தலைமுறை இயக்குனர்.
ஆனால், இவர் பல படங்களில் நடித்து விட்டு இப்போது இயக்குனராகியிருக்கிறார். தெலுங்கில்தான் இந்த இஞ்சி இடுப்பழகி படம் ஜீரோ சைஸ் என்று முதலில் உருவாக இருந்தது. அப்போதுதான் அனுஷ்கா நடிப்பில் உருவாகிக்கொண்டிருந்த பாகுபலி, ருத்ரமா தேவி ஆகிய படங்கள் தமிழிலும் வெளியாக இருந்ததால், ஜீரோ சைஸ் படத்தை தமிழிலும் இயக்க முடிவெடுத்து, தமிழ், தெலுங்கு நடிகர்களை கலந்து நடிக்க வைத்துள்ளனர். அதையடுத்து தமிழில் இளையராஜாவின் இசையில் சூப்பர் ஹிட்டான இஞ்சி இடுப்பழகி பாடல் வரியை இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்.
ஆக, தனது தாத்தா கே.எஸ்.பிரகாஷ்ராவ், காதல் படங்களாக இயக்கிய நிலையில், அவரது பேரன் பிரகாஷ், வித்தியாசமான கதை களத்தில் அதாவது, உடல் பருமனான ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார். அதோடு குண்டான பெண்களை திருமணம் செய்ய இளைஞர்கள் பயப்படும் நிலையில், இனிமேல் குண்டான பெண்களை திருமணம் செய்து கொள்ள அவர்கள் விரும்பும் வகையில் இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறாராம் பிரகாஷ்.