பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மூளைக்காய்ச்சலால் நடிகர் விவேக் மகன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 13. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவருக்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு மகள்களும், பிரசன்னா குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் பிரசன்னா மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பிரசன்னாவின் உயிர் பிரிந்தது.
பிரசன்னாவின் உடலை விவேக்கின் சென்னை இல்லமான விருகம்பாக்கத்தில் அஞ்சலிக்காக வைத்துள்ளனர். வெள்ளியன்று, சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
மகன் இறந்த சம்பவம் நடிகர் விவேக்கை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே நடிகர் விவேக் விடுத்துள்ள செய்தியில், அன்பு பத்திரிகையாளர்கள் நண்பர்களுக்கு, எனது மகன் பிரசன்ன குமாரின் திடீர் மறைவு என்னையும், எனது குடும்பத்தையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் என் மகனுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் செய்தி சேகரிக்கவோ, வீடியோ எடுக்கவோ, போட்டோ எடுக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். என் உணர்வுகள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.