14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
லத்திகா படத்தை ஒரே காட்சி வீதம் 225 நாட்கள் சில தியேட்டர்களில் ஓட வைத்த டாக்டர் சீனிவாசன், தனது பெயருக்கு முன்பு பவர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டு பெரிய பப்ளிசிட்டியும் செய்து வந்தார். விளைவு, இப்போது அந்த பட்டப்பெயரே அவரது பெயராகி விட்டது. அதோடு, கண்ணாலட்டு தின்ன ஆசையா படத்தில் அவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால் பேசப்படும் காமெடி நடிகரான சீனிவாசன், தற்போது சவுகார் பேட்டை, நாரதன், மகுடி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பில்லா-2வில் அஜீத் நடித்த பிறகு விஸ்வரூபம்-2, காஞ்சனா-2, சிங்கம்-2 என பல படங்களின் 2ஆம் பாகம் உருவாகின. இப்போது பாகுபலி-2வும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த டாக்டர் சீனிவாசனும் தான் முதன்முதலாக தயாரித்து நடித்த லத்திகா என்ற படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், எனது லத்திகா படத்திற்கு தமிழக ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தனர். அதனால் அவர்களின் விருப்பத்திற்கிணங்க இப்போது லத்திகா-2 படத்தை எடுக்கப்போகிறேன். முதல் பாகத்தைவிட இந்த பாகத்தில் காதல், செண்டிமென்ட், ஆக்சன் என்றும் பின்னி எடுக்கப்போகிறேன் என்று கூறும் சீனிவாசன், அந்த படத்தில் முன்னணி நடிகை யாரையேனும் நடிக்க வைத்து விட வேண்டும் என்று சில நடிகைகளுக்கு தூது விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.