சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் |
பொன்னர் சங்கர் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் ஒரு சில குறைகளையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இப்படியொரு பிராமாண்ட படத்தை கொடுத்த தியாகராஜன் பாராட்டு மழையில் நனைந்தபோதிலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் சில திருத்தங்களை செய்ய முன்வந்திருக்கிறார். படத்தை பார்த்த சில திரையுலக விஐபிக்கள் முக்கியமாக ஒரேயொரு குறையை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதாவது குஷ்புவும், ஜெயராமும் இறந்த பின்னர் தனது பெற்றோர் இறந்து விட்டதை பார்த்து பிரசாந்த் அதிர்ச்சி அடையாதது பற்றி விமர்சித்திருக்கிறார்கள். அட்லீஸ்ட் அவர்கள் மரணம் குறி்தது ஒரு டயலாக்காவது பேசியிருக்கலாம் என்றும் விமர்சனம் வந்துள்ளது. இதையடுத்து அந்த காட்சியை மட்டும் மீண்டும் படம்பிடித்து படத்தில் இணைக்க முடிவு செய்த தியாகராஜன், இதற்கான சூட்டிங்கையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.




