இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பொன்னர் சங்கர் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் ஒரு சில குறைகளையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இப்படியொரு பிராமாண்ட படத்தை கொடுத்த தியாகராஜன் பாராட்டு மழையில் நனைந்தபோதிலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் சில திருத்தங்களை செய்ய முன்வந்திருக்கிறார். படத்தை பார்த்த சில திரையுலக விஐபிக்கள் முக்கியமாக ஒரேயொரு குறையை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதாவது குஷ்புவும், ஜெயராமும் இறந்த பின்னர் தனது பெற்றோர் இறந்து விட்டதை பார்த்து பிரசாந்த் அதிர்ச்சி அடையாதது பற்றி விமர்சித்திருக்கிறார்கள். அட்லீஸ்ட் அவர்கள் மரணம் குறி்தது ஒரு டயலாக்காவது பேசியிருக்கலாம் என்றும் விமர்சனம் வந்துள்ளது. இதையடுத்து அந்த காட்சியை மட்டும் மீண்டும் படம்பிடித்து படத்தில் இணைக்க முடிவு செய்த தியாகராஜன், இதற்கான சூட்டிங்கையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.