ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றார்கள். தலைவர், செயலாளர், துணை தலைவர்கள், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் மற்றம் 20 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள். சரத்குமார் அணி சார்பில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய 4 பேர் மட்டும் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மிகப்பெரிய பலம் பொருந்திய விஷால் அணியின் செயல்பாட்டுக்குள் இந்த 4 பேரின் பங்கு என்ன என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்த நான்கு பேருக்கும் உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக விளக்கம் தரவேண்டும் என்பது விஷால் தரப்பினர் எடுத்திருக்கும் உடனடி முடிவு. முதல் செயற்குழு கூட்டத்திலேயே அது வெளிப்பட்டது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான டாக்குமெண்டை சரத்குமார், ராம்கி மூலமே நாசரிடம் ஒப்படைத்திருக்கிறார். அதேபோல சங்கத்தின் வரவு செலவையும் அவர் மூலமாகவே ஒப்படைப்பார் என்றும் தெரிகிறது. புதிய நிர்வாகிகள் கொண்டு வரும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்புவது. உறுப்பினர் சேர்கை, விடுவிப்பு சரியாக நடக்கிறதா என்று கண்காணிப்பது. புதிய நிர்வாகிகள் செய்யும் தவறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த நால்வரும் செய்வார்கள் என்று தெரிகிறது.
ஆனால் இந்த நான்கு பேரில் ஒருவருக்கு புதிய கட்டித்திற்கான நிதி திரட்டும் குழுவில் முக்கிய பொறுப்பு வழங்குவது உள்ளிட்ட பதவிகளை கொடுத்து அவர்களையும் தங்களோடு இணைத்துக் கொண்டு செயல்பட புதிய நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதற்கு எந்த நான்கு பேரும் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்பது போக போகத் தெரியும்.